Wednesday, January 21, 2009

திருக்குறள் ஞான அமுது-ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு


திருக்குறள் ஞான அமுது-தவத்திரு.ரெங்கராஜ தேசிகசுவாமிகள்
திருக்குறளைப் பற்றி இவ்வளவு எளிதாக வேறு எவரும் விளக்கம் அளித்திருப்பார்களா? சந்தேகமே!
ஆன்மீகத் தேடல் உள்ளவர்களுக்கு இந்த புத்தகம் ஒரு அற்புத வழிகாட்டி.
பம்மல் கே.சம்பந்தம் படத்தில் கமல் கூறுவது போல பழமொழியைச் சொன்னால் புரியாது.அதை அனுபவித்துப்பார்த்தால் தான் புரியும் என்பது போல் இந்த புத்தகம் ஒரு சிறந்த ஆன்மீகப் பொக்கிஷம்.இந்தப் புத்தகத்திலிருந்து சில வரிகள்:
*இதயத்தில் தூய்மை இல்லாமல் எந்த மந்திரத்தைச் சொன்னாலும் அது பயன் தராது.
*துறவு மேற்கொள்கிறவனுக்கு முன் செய்த நல்வினை இருந்தால்தான் ஞானம் கைகூடும்.
*தினமும் தலைவனை(அகத்தியர் முதலான சித்தர்களில் ஒருவரை) நினைத்து உருகி பூஜை செய்தால் பாவங்கள் சேராது.காமம் அடிபட்டுப் போகும்.கோபம் அடிபட்டுப்போகும்;நான் என்ற கர்வமும் அடிபட்டுப் போகும்.
*காய்கறி உண்பதால் மனதில் சாந்தம் திகழும்.அதே சமயம், எந்த கர்ம வினையும் நம் ஆன்மாவிற்கு வராது.

*அசைவம் உண்பதால் மனதிலும்-உடலிலும் மூர்க்கத்தனம் வளரும்.காம வெறியைத்தூண்டும்.அறிவை(பகுத்தறிவை) மங்கச் செய்யும்.

*ஒருவரது தவம் முற்றுப் பெற 27,000 ஆண்டுகள் தவம் செய்திருக்க வேண்டும்.
*தவசிகள்( மாபெரும் துறவிகள்) மனமகிழ்ந்து ஒருமுறை வீட்டில் சாப்பிட்டால் மூன்று புவனத்தார் சாப்பிட்டதற்குச் சமம்.மேலும் 1024 அண்டங்களில்(காலக்சி)உள்ளவர்கள் சாப்பிட்டதற்கான புண்ணியம் கிடைக்கும்.
*தாம்பத்திய உறவுக்கு முன் 10 நிமிடம் பூஜை செய்தால் பண்புள்ள புத்திரபாக்கியம் உண்டாகும்.

இந்த புத்தகம் கிடைக்குமிடம்:ஸ்ரீ அகத்தியர் சன்மார்க்க சங்கம்,113,நகர் விரிவாக்கம்,துறையூர்-621010.திருச்சிமாவட்டம்.தமிழ்நாடு.
விலை.ரூ.38/- ஆடியோவாகவும் கிடைக்கிறது.
போன் எண்:04327-255684,255184.
குறிப்பு:இங்கு சுமார் 12 வருடங்களாக அனாதைகள்,வயதான முதியவர்களுக்கு தினமும் அன்னதானம் 3 வேளையும் வழங்கப்பட்டுவருகிறது.சித்தர் வழிபடும் முறை சொல்லித்தரப்படுகிறது.விரும்பும் அன்பர்கள் அன்பளிப்பு(பணம் அல்லது உணவுப் பொருட்கள்) வழங்கலாம்.
நான் ஒருமுறை கூட இங்கு நேரில் சென்றதில்லை.

No comments:

Post a Comment