Monday, January 19, 2009

காமவாழ்க்கையில் நிம்மதிக்கு-ஓஷோவின் வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்


வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள்-ஓஷோ

செக்ஸ் சாமியார், எல்லா மதங்களையும் அழிக்கப் பிறந்தவர்,ஒழுக்கத்தை உலகமயமாக்குபவர்-என்று ஏராளமான விமரிசனத்திற்கு உள்ளானவர் ஓஷோ என்ற ரஜனீஷ் நமது இந்தியாவில் பிறந்தவர்.
மகாராஷ்டிரம் மாநிலத்தில் குச்வாடா என்ற கிராமத்தில் 11-11-1911இல் பிறந்தவர்.
தத்துவத்தில் இவரது சிந்தனை அமெரிக்காவையே 1970-1980களில் ஆட்டிப்படைத்தது.இவரைப் பற்றி முறையாகத் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்கள் வாசிக்க வேண்டியது
வார்த்தைகளற்ற மனிதனின் வார்த்தைகள் என்ற புத்தகத்தைத் தான்!
ஓஷோவின் பேச்சுக்களிலிருந்து சிறு சிறு துளிகளாக இந்த புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.இந்த ஒவ்வொரு துளியும் நமது மனதில் நாம்-நமது தனிப்பட்ட உலகம்-நமது காம வாழ்க்கை பற்றி யாதார்த்தமான சிந்தனையை உருவாக்கும்.
எனது வாசிப்பு அனுபவப்படி,
எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் திருமணம்தான் என்று சாணக்கியர் கூறியுள்ளார்.
ஆனால்,இந்த செல்போன் – இண்டர்நெட் யுகத்தில் எல்லா பிரச்னைகளுக்கும் காரணம் காமம்தான் என்பேன்.அந்த காமம்-அதனால் எழும் பிரச்னைகளுக்கு ஓஷொதான் மிக விரிவாக விளக்கம் அளித்துள்ளார்.
காமத்தில் ஒவ்வொரு ஆணும்-ஒவ்வொரு பெண்ணும் முழு திருப்தி அடையாமல் மற்ற துறைகளில் ஜெயிக்கமுடியாது.இது பற்றி விரைவில் ஆன்மீகக்கடல் டாட் பிளாக்ஸ்பாட் டாட் காம்மில் எழுதுவேன்.

விலை-ரூ.50/-க்குள்.பக்கம் 120க்குள்
வெளியீடு:ஓஷொ பவுண்டேஷன்,தமிழ்நாடு.
இணையமுகவரி:www.oshoworld.com
தமிழக முகவரிகள்:ஓஷொ தர்ம தீர்த்த சன்னியாச ஆஸ்ரமம்,48 & 51 ஜாபர்ஷா தெரு,ஜி.எம்.ஆர்.ஜையின்பவன்,3 ஆம் தளம்,திருச்சி-8.
சேலம்-0427-2281688
கோயம்புத்தூர்-0422-25421,98432-37793,94431-64565.

No comments:

Post a Comment