Thursday, February 19, 2009

நான் ஏன் புத்தகம் படிக்கும்படி எழுதுகிறேன்?


ஏன் நான் ஜீனியஸ் தமிழ்புத்தகங்கள் என்ற வலைப்பூ எழுதுகிறேன்?

1970 களில் பெட்ரோல் உலகத்தின் தலையெழுத்தை மாற்றியது.
1980 களில் அந்த இடத்தை ப்ளாஸ்டிக் பிடித்தது.
1990 களில் அணுகுண்டு அரசியல் உலக வரலாற்றில் முக்கிய இடத்திற்கு வந்தது.
1995 ஜனவரி 1 முதல் உலக வர்த்தக அமைப்பு உலகின் தலையெழுத்தை மாற்றி யெழுதியது.
2000 முதல் 2100 வரை தகவல் நமது ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் மாற்றும்.
இன்று தகவல்களே ஆயுதங்கள்!
நீங்கள் ஒரு குறிப்பிட்ட துறை பற்றி 25% தெரிந்தாலே அந்தத்துறையில் உங்கள் ஆதிக்கம் தொடங்கிவிட்டது என்று அர்த்தம்.
அதே சமயத்தில் ஏராளமான ஞாபகசக்தி இருந்தால் ஒரு ஆண் அல்லது பெண்ணுக்கு எப்போதும் தற்கொலை எண்ணம் வராது என்பதை நவீன மனோதத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.நமது இந்து முன்னோர்கள் தினமும் கந்த சஷ்டிகவசம்,திருப்பாவை,திருவெம்பாவை,திருக்குறள்,பெரியபுராணம் என ஏராளமான புராண-இதிகாச புத்தகங்களை மனப்பாடம் செய்திருப்பது இந்த விஞ்ஞான ரகசியத்தின் அடிப்படையில் தான்.
எனவே கணிப்பொறியும் இணைய வசதியும் வீட்டுக்குள் உலகத்தையே கொண்டுவந்தாலும் நாம் ஒவ்வொருவரும் ஒரு பெண்டியம் 4 கணினி அளவிற்காவது பொது அறிவு, வாழ்வியல் தத்துவங்கள்,மனதத்துவம் அறிந்து கொள்வது நன்று.இந்த வலைப்பூ துவங்கியது முதல் நான் இதை ஒரு இண்டர்நெட் மையத்திலிருந்து தான் தினமும் ஒரு மணிநேரம் எழுதிவருகிறேன்.என் வயது 2009 அன்று 33 நிறைவடைகிறது.எனது மாத வருமானத்தில் 30% வலைப்பூவை வளர்க்கவே செல்கிறது.
நமது ஆதர்ஷ ஜனாதிபதி உயர்திரு.அப்துல்கலாம் அவர்களை நான் இரண்டாம் விவேகானந்தராகவே கருதுகிறேன்.இந்த தேசத்தில்(இந்தியாவில்) பிறந்த ஒவ்வொரு ஆணும் பெண்ணும் ஜீனியஸ் ஆகவேண்டும்.அவர்களது குழந்தைகளும் ஜீனியஸ் ஆக வேண்டும்.நமது நாட்டைப்பார்த்து சீனா ,அமெரிக்கா அஞ்சவேண்டும்.எப்பேர்பட்ட நயவஞ்சகத்தாலும் நாமும்,நமது குடும்பமும்,நமது மாநிலமும்,நமது தமிழ்ரத்தங்களும்,நமது இந்துயாவும் சிறிதும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நான் இந்த வலைப்பூவை எழுதுகிறேன்.
நான் ஒரு பி.ஏ.பட்டதாரி..இதைப்படிக்கும் எனது தமிழ் ரத்தங்களே!
நமது இந்துயா ஒரு ஜீனியஸ் வல்லரசாக நீங்கள் செய்ய வேண்டியது-உங்கள் தினசரி வேலைகளை நேர்த்தியாகச் செய்யுங்கள்.நிறைய புத்தகங்கள் படியுங்கள்.அது போதும்.ஜெய் ஹிந்த்!!!!!!!!!!